*இயற்கை மாடித்தோட்டம்... செய்யக்கூடியதும், செய்யக்கூடாததும்...*
👌🏽
*மாடித்தோட்டத்தில் செய்ய வேண்டியவை..!*
தமிழ்நாட்டை பொறுத்தவரை கோடைக்காலம் முடிந்து ஜூன் , ஜூலை மாதங்களுக்கு மேல் வீட்டுத் தோட்டம் அமைப்பது நல்லது.
மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டம் அமைக்க குறைந்தது 8 மணி நேரம் சூரிய ஒளி நன்கு படும் இடமாக தேர்வு செய்யவது முக்கியம்.
தோட்டத்திற்கு தேர்வு செய்த இடத்தில் தளத்தை ஈரம் தாக்காமல் இருக்க பாலித்தின் விரிப்பினை தளத்தில் பரப்ப வேண்டும்.
அல்லது ரூபிங்பெயின்ட் அடித்து கொள்ளவும்.
அல்லது ரூபிங்பெயின்ட் அடித்து கொள்ளவும்.
காய்கறித்தோட்டம் போட வேண்டும் என்று முடிவு செய்தவுடன் பெரியதாக இடத்தைத் தேடி அலைய வேண்டாம். மனசு வைத்தால் போதும். மொட்டை மாடியில் காய்கறி, மாடிப்படிகளில் கீரை, சன்னல் ஓரங்களில் ரோஜா என்று எல்லாவித செடிகளையும் வளர்க்கலாம்.
தேங்காய்த் துருவினதும் தூக்கி எறியும் கொட்டாங்குச்சியில் கூட கீரை வளர்க்கலாம்.
தொட்டி, பாலிதின் பை, நேரடியாக நிலத்தில்... என எதில் செடி வளர்க்க வேண்டும் என்றாலும், அடிப்படையான சில விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நீங்கள் செடி வளர்க்க நினைக்கும் பையில், அல்லது நிலத்தில் ஒரு பங்கு செம்மண், ஒரு பங்கு மணல்,அல்லது (தேங்காய் நார்) ஒரு பங்கு இயற்கை உரம்
மண்புழு உரம் என கலந்து வைக்க வேண்டும்.
(தொழு உரத்தையும் அதனுடன் கலக்கலாம்)
மண்புழு உரம் என கலந்து வைக்க வேண்டும்.
(தொழு உரத்தையும் அதனுடன் கலக்கலாம்)
இந்த மண் கலவை தயரானதும் உடனே விதை விதைக்கலாம்.
பை, தொட்டியின் அடிப்புறம் நான்கு திசைகளிலும் அதிகப்படி நீர் வெளியேற துவாரங்கள் இட வேண்டும்.
கத்திரி, மிளகாய் மற்றும் தக்காளி பயிர்களை நாற்று விட்டு நடவு செய்ய வேண்டும்.
வெண்டை, முள்ளங்கி, செடி அவரை மற்றும் கீரை வகைகளை நேரடியாக விதைப்பு செய்ய வேண்டும்.
பஞ்சகவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து பையில் ஓரத்திலும் செடியின் மேலும் தெளிக்க வேண்டும்.
பூச்சி தாக்குதலை தவிர்க்க வாரம் ஒரு முறை இஞ்சி பூண்டு கரைசல் மற்றும் வேம்பு பூச்சிவிரட்டியை 2 மில்லி என்ற அளவில் 1 லிட்டர் நீரில் கரைத்து மாலை வேளையில் செடிகளின் மேல் தெளிக்க வேண்டும்.
கோடை காலத்தில் இருமுறையும், குளிர் காலத்தில் ஒரு முறையும் ஒரு பைக்கு ஒரு லிட்டர் நீர் ஊற்ற வேண்டும். காலை அல்லது மாலை நேரத்தில் மட்டுமே பாசனம் செய்ய வேண்டும்.
*மாடித்தோட்டத்தில் செய்யக்கூடாதவை..!*
❌
கோடைக்காலத்தில் புதியதாக தோட்டம் அமைப்பதை தவிர்க்க வேண்டும்.
அப்படி அமைக்க நினைத்தால் நிழல் வளைக்கொண்டு வெயில் அதிகம் படாதமாதிரி ஒரு செட் அமைத்து அதன் உள் தோட்டம் அமைக்கலாம்.
காய்கறி தோட்டம் அமைக்க நிழல் விழும் பகுதியை தேர்வு செய்யக் கூடாது.
பைகளை நேரடியாக தளத்தில் வைக்கக் கூடாது.
பைகளை நெருக்கி வைக்கக் கூடாது.
* ராசாயன உரங்களுடன் உயிர் உரங்களை கலந்து இடக் கூடாது.
ரசாயன பூச்சி மற்றும் பூஞ்சண கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது.
மழை காலங்களில் நீர் ஊற்றக் கூடாது....
தொடரும்....
*முயற்சி வெற்றி பெறும்......*

No comments:
Post a Comment